சென்னை,நவ.7- தமிழ்நாட்டில் வருகிற 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நான்கு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் செந்தாமரை கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இலங்கை கடற்கரையையொட்டி யுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதற்கிடையில் தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு கிறது. இதன் காரணமாக நவ. 9 அன்று தமிழகம், புதுவையில் அநேக இடங்க ளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல், 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்காலில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். கன்னி யாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, ராம நாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயி லாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.